காரிமங்கலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

காரிமங்கலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த பேரூராட்சி தலைவர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஸ்ரீதுளசியம்மாள் திருமண மண்டபத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகளை 30 நாட்களுக்குள்  தீர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் அறிவித்த மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிக்கு  பேரூராட்சி தலைவர் BCR மனோகரன் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், திமுக மாவட்ட துணை செயலாளர் வக்கில் ஆ.மணி, மேற்கு ஒன்றிய செயலாலர் வக்கில் எம்.வீ.டி. கோபால், மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, சுகாதார துறை, காவல் துறை, வேளாண்மைத் துறை, மாற்று திறனாளிகள் நல துறை, மின்சார துறை உள்ளிட்ட 16 துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த முகாமில்  மின்வாரிய பொறியாளர் அருன் பிரசாத், துணை செயற்பொறியாளர் ரமேஷ்,  துணைத் தலைவர் சீனிவாசன், கவுன்சிலர்கள் ரமேஷ் மாதப்பன், சதீஷ்குமார், முத்துசெல்வம், சிவகுமார், ராஜா, பிரியா, சக்தி ரமேஷ், ராஜம்மாள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad