அரூரில் மக்களுடன் முதல்வர் என்னும் சிறப்பு முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

அரூரில் மக்களுடன் முதல்வர் என்னும் சிறப்பு முகாம் நடைபெற்றது.


அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்த மக்களுடன் முதல்வர் என்னும் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமிற்கு பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் தலைமை வகித்தார் துணைதலைவர் சூர்யாதனபால் பேரூராட்சி உறுப்பினர் முல்லைரவி ஆகியோர்  முன்னிலை வகித்தார்  வருவாய் கோட்டாச்சியர் வில்சன்ராஜசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  முகாமை  தொடங்கிவைத்தார்  இம்முகாமில் வருவாய்துறை மாற்றுத்திறநாளிகள் கூட்டுறவுத்துறை சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைதுறை தொழிலாளர் நலத்துறை நகர்புற ஊரமைப்புதுறை மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் பதிவுகள் செய்யும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில்  பொதுமக்கள் வழங்கும்  மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்  இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் கனிமொழி பேரூராட்சி செயல்அலுவலர் ம.விஜயசங்கர்  வருவாய் ஆய்வாளர் கார்த்திக் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம்   பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழி திமுக நிர்வாகிகள் முஜீப் சூர்யாவெங்கடேசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad