தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கிளை மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பழனி தலைமை வகித்தார். தமிழ் நாடு அறிவியல் இயக்க ஏரியூர் ஒன்றியத்தின் செயலாளர் த.சந்தோஷ்குமார் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் துரைராஜ், பொருளாளர் கார்த்திக் இயற்கை ஆர்வலர் முத்துக்குமார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏரியூர் ஒன்றியத்தின் தலைவர் நா.நாகராஜ் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார் ஏரியூர் ஒன்றியத்தின் பொருளாளர் கோ.முத்தரசு நன்றி கூறினார். இந்நிகழ்வில் பூமணி, பரமசிவம், ஆறுமுகம் உள்ளிட்டோர் பள்ளி, கல்லூரி, ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக