அரூரில் நாட்டுபுற கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 டிசம்பர், 2023

அரூரில் நாட்டுபுற கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


அரூரில் நாட்டுபுற கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் அரூரில் தருமபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர்  ஒருங்கிணைந்த மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் என்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பழனிசாமி செயலாளர் கணேசன் வட்டார தலைவர் வெங்கடேசன் பச்சமுத்து ஆதிமூலம் பெருமாள் வேடியப்பன் சேகர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினராக அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


பின்னர் சங்க வளர்ச்சி கலைஞர்களின் வாழ்வாதாரம் சங்க செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது  இதில் மாநில நிர்வாகிகள்  தங்கஜெயராஜ் செல்வராஜ் ஜே.குப்புசாமி பழனி நகூர்மணி கேஎஸ்கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad