அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியை சேர்ந்தவர் சி.இளங்கோ இவர் சேலம் மாவட்டம் கரியகோயில்வளவு அரசு உண்டுஉறைவிட மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி இ.சுமதி இவர் கடந்த ஆண்டு இயற்கை எய்தினார் இவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரூர் அருகே உள்ள அக்ராஹரம் லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி தனது மனைவியின் நினைவு நாளை அனுசரித்தார் முன்னதாக சுமதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் முதியோர் இல்லத்தில் வைக்கபட்டுள்ள அவரது உறுவபடத்திற்கு முன் அனைவரும் சேர்ந்து கூட்டுபிரார்த்தனை செய்தனர் அனைவருக்கும் காலை உணவு வழங்கினர்.
இதில் இ.பிரவின் இ.இனியவன் இ.தமிழோவியம் இ.வாசுகி சி.சம்பத் சி.நாகராஜ் செல்விதிருசூலம் கார்மேகம் சிங்காரவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக