தர்மபுரி மாவட்டம் அரூரில் ஐக்கிய மற்றும் மத நல்லிணக்க கிறிஸ்மஸ் விழா, தூய இருதய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் வரலாற்று கதையை பள்ளிக் குழந்தைகள் நாடக வடிவில் நடித்து காட்டினார்கள்.
தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவம் அனைவரும் ஒன்றே என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் தலைமையில் கிருஸ்துமஸ் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர், நகர திமுக செயலாளர் முல்லை ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வேடம்மாள், புத்த மத பொறுப்பாளர் சா.புத்தமணி, அர்ச்சகர் விஜயகுமார், லயோலோ கல்வி குழுமத்தின் அருட் தந்தைகள் பால் பெனடிக்ட், ஜான் மைக்கிள், யூஜின், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் சி.தென்னரசு உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் முகமது அலி, ஏ.முஜீப், பி.வி.சேகர், கோட்டிஸ்வரன், தமிழழகன், திருவேங்கடம், நகர துணை செயலாளர் விண்ணரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக