பென்னாகரம் சமுக சேவை குழு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 டிசம்பர், 2023

பென்னாகரம் சமுக சேவை குழு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில்  பென்னாகரம் சமுக சேவை குழு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா ஸ்ரீதேவி திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் தேவகி பரமசிவம் அவர்கள் வரவேற்றார். இந்நிகழ்விற்கு கூத்தப்பாடி மா.பழனி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமை தாங்கினார். 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக  மாகாலட்சுமி பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கல்பனா பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர், வீரமணி பென்னாகரம் பேரூராட்சி தலைவர் அவர்கள் கலந்து கொண்டனர் . பென்னாகரம் சமூக சேவை குழுவின் தலைவராக அன்பழகன் அவர்களும் செயலாளராக மணிவண்ணன் அவர்களும், பொருளாளராக கமலேசன் அவர்களும்  மற்றும் துணை பொறுப்பாளர்களாக கமல், அரவிந்த் ராஜ்,சீரஞ்சீவி அவர்களும் மற்றும் புதிய உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனர். 


இந்த அமைப்பின் நோக்கங்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிதல், இயற்கை சார்ந்து செயல்படுதல் போன்றவையாகும் இந்நிகழ்வில் ஸ்ரீதேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் அன்பரசு மற்றும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad