தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற மை தருமபுரி அமைப்பினர். நிவாரண பொருட்களை தூத்துக்குடி பகுதியில் உள்ள வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான அலங்கார் திட்டு மற்றும் கணபதி நகர் பகுதிகளில் உள்ள 2000 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், குடிநீர், அரிசி பருப்பு, பால் பவுடர், நாப்கின் ஆகியவற்றை வழங்கினர். 

இன்னும் இந்த பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. சென்னை மிக்ஜாம் புயல் மற்றும் தூத்துக்குடி பெருவெள்ள நிவாரண உதவிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்களை மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம் முஹம்மத் ஜாபர், அருள்மணி, ஹரீஷ் ஆகியோர் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வழங்கினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad