K.வெற்றி தொண்டு நிறுவனத்திற்கு சமூக சேவை பாராட்டி ஜீவகாருண்ய விருது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 டிசம்பர், 2023

K.வெற்றி தொண்டு நிறுவனத்திற்கு சமூக சேவை பாராட்டி ஜீவகாருண்ய விருது.


தர்மபுரி மாவட்டம் K.வெற்றி தொண்டு நிறுவனம்  கடந்த 15-ஆண்டுகளாக சமூக சேவை செய்து செய்து வருகின்றது, மகளிர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று தருதல், அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், வயதான முதியோர்களுக்கு போர்வை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது போன்ற சமூக சேவைகள் செய்து வருகின்றது இதை பாராட்டும் விதமாக. ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் K.வெற்றி தொண்டு நிறுவன இயக்குனர் திருமதி. கங்கா சக்கரவர்த்தி அவர்களுக்கு ஜீவகாருண்ய விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சன்மார்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கு மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad