மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ( UDID – Unique Disability ID ) பெற E-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 டிசம்பர், 2023

மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ( UDID – Unique Disability ID ) பெற E-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் (UDID – Unique Disability ID) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. 

இனி வருங்காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு UDID அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை UDID அட்டை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள E சேவை மையங்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (மருத்துவச்சான்று உட்பட), ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்தறனாளி நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், www.swavlambancard.gov.in என்ற இணைய தளத்தில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களுக்கு 04342-230050 மற்றும் 9443771045 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் மாற்றுத்திறனாகளின் முக்கிய ஆவணமான UDID அட்டை பெற தாமதமின்றி மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad