தருமபுரி மாவட்டம். பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தில் நியூஜெனரேசன், என்னும் தனியார் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, நேற்று மாலை பள்ளி முடிந்து சுமார் 4:30 மணிக்கு 35 பள்ளி மாணவர்களுடன், பாளையத்தில் இருந்து பஞ்சப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது, பட்டாபி நகர் என்னும் இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இடது பக்கம் இருந்த சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள், குழந்தைகளை மீட்டு பஞ்சப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசான காயத்துடன் அதிர்வசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக