"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் 2வது நாள் நிகழ்வு, பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சிஅயர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 பிப்ரவரி, 2024

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் 2வது நாள் நிகழ்வு, பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சிஅயர் ஆய்வு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் 2வது நாளாக, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் 2வது நாளாக, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (22.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் நேற்றைய தினம் முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


“உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பென்னாகரம் வட்டத்தில் அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். 


இந்த ஆய்வினை தொடர்ந்து, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்கள்.


இதனைதொடர்ந்து தித்தியோப்பனஅள்ளி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் உங்கள் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் குழந்தைபாதுகாப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அதிகாலை முதல் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் 2வது நாளாக நடைபெற்றது.


இத்திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சின்ன ஏரியில் அம்ரூத் 2.0 (2022-2023) திட்டத்தின் கீழ், ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளின் இயக்க நேரம் குறித்து கேட்டறிந்தார்கள்.


இதனைதொடர்ந்து, பாப்பாரப்பட்டிம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட குடிநீரில் உள்ள குளோரினேசன் அளவு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டுமெனவும், சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது உறுதிசெய்திட வேண்டுமெனவும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்கள். மேலும், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுகள் தயார் செய்யப்பட்டுவருவதையும், உணவின் சுவை குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்கள்.


தொடர்ச்சியாக, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுதேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் (2022-2023)-ன் கீழ், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்பாடு செய்தல் பணிகளையும், அ.பாப்பாரப்பட்டியில் இயங்கிவரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் கொள்முதல் நிலையத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பென்னாகரம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் காலை 9.00 மணி முதல் இன்றைய தினம் காலை 9.00 மணி வரை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டுமெனவும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தரமானதாக இருக்க வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.


இந்நிகழ்வுகளின் போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.சுகுமார், பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் திருமதி.கோமதி ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad