பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு 5 கிராம மக்கள் சாலை மறியல். ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காத அரசை கண்டித்து போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு 5 கிராம மக்கள் சாலை மறியல். ஆறு மாதங்களாக குடிநீர் வழங்காத அரசை கண்டித்து போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மஞ்சாரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான்காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று ஏரியூர்- மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.


சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.


இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேண்களும், 3 அரசு பேருந்தும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இருபுறங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad