பாலக்கோடு பேருந்து நிலையத்தில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் சீரமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறை பழுதடைந்து காணப்பட்ட நிலையில், அதனை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, பேரூராட்சி சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்டண கழிப்பறை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள.பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  பேருராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள்  ஜெயந்தி மோகன்  மோகன், சிவசங்கரி ரவி,  சரவணன்  கிளைசெயலாளர் கணேசன்  கார்மெண்ட்ஸ் சக்தி வேல்   சின்னசாமி டெக்ரேட்டர்  தளபதி இளஞ்சூரியன் கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்ததாரர் பி.எல்.ஆர் இளம்சூரியன்  பேருந்து நிலைய கழிப்பிட ஒப்பந்தாரர்மற்றும்  கடைக்கார்கள் மேஸ்திரி சின்னசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad