தக்காளி மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 60 நபர்கள் மீது வழக்கு பதிவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

தக்காளி மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 60 நபர்கள் மீது வழக்கு பதிவு.


தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீ புதுர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது, இதனையொட்டி கோயில் வளாகத்தில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத் துறை நிர்வாக அலுவலர் கூறியதாக கூறி, நேற்று முன்தினம்  காலை  திடிரென 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக குமார் (வயது.42), முருகேசன் (வயது.43), முருகேசன்(வயது. 50), கோவிந்தசாமி (வயது. 55), ராஜா (வயது. 50), பெருமாள், ரங்கநாதன், செளந்தர், பாலாஜி, சங்கர் உள்ளிட்ட 60 நபர்கள் மீது பாலக்கோடு போலீசார்  வழக்கு பதிவு.

கருத்துகள் இல்லை:

Post Top Ad