பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 76 மாணவ மாணவிகள் இரத்தம் தானம் வழங்கினார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 76 மாணவ மாணவிகள் இரத்தம் தானம் வழங்கினார்கள்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்பறம் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பாலக்கோடு அரசுமருத்துவமனை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் இனைந்து நடத்திய இரத்ததான முகாமினை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் பிரியா தலைமை வகித்து துவங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராணி, துணை முதல்வர் ரவி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் பேசிய மருத்துவர் பாலசுப்ரமணியம் 18 வயதிற்க்கு மேற்பட்ட ஆரோக்கியமான அணை வரும் இரத்த தானம் வழங்கலாம், இதனால் விபத்தில் அடிபட்டு உயிருக்கு பேராடுபவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் போது இரத்தம் இழப்பை ஈடு செய்து உயிரை காக்க  உதவியாக இருக்கும்.


இரத்தம் தாய்ப்பாலுக்கு நிகரானது எனவே அனைவரும் இரத்த தானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார். இம்முகாமில் 76 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.


இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முருகன், சந்தோஷ்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad