இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் சங்கர், கவுன்சிலர் விமலன், குருமணி, ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, நகர இணை செயலாளர் லட்சுமிகொளந்தை, முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், முன்னாள் கவுன்சிலர் ராஜா, அவைத்தலைவர் முர்த்துஜா, நகர துணை செயலாளர் ஆறுமுகம், வீரமணி, அர்மன்நவாப், பாஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ராஜா, புஷ்பராஜ், சோமேஷ், விஷ்ணு, பசுபதி, கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக