பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 76ம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 76ம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில், அதிமுக சார்பில்,  முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 76ம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்ட்த்திற்க்கு சட்டமன்ற உறுப்பிணர்கள் கோவிந்தசாமி, சம்பத், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர்கள் பாரீஸ்ராஜா, மதுரபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தலைமை உரை ஆற்றிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.அவர்கள் கடந்த அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், தற்போது நடைபெற்று வரும் திமுக அரசில் மக்கள் படும் வேதனைகளையும் எடுத்துரைத்தார்.


முன்னதாக பாலக்கோடு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் 180 பேருக்கு சீருடை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணியை சேர்ந்த நிர்வாகிள், பொதுமக்கள்  மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad