இந்நிலையில் சின்ன கும்மனூர்காலணி, வளைகாரப்பட்டி, படகாண்டகாலணி, ஜனப்பனூர் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர், உணவு பூங்கா தொடங்காததால் அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட மூங்கில், தென்னைஓலை, கடப்பாரை ஆகியவற்றுடன், இன்று காலை குவிந்தனர்.
இதனை கண்ட இராசிக்குட்டையை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் ஆக்கிரமித்து கொட்டகை அமைக்க கூடாது என கூறி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, துணை தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து ஆக்கிமிப்பாளர்களை எச்சரிக்கை செய்து அகற்றினர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் திடிர் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக