அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக "விலங்கியல் மன்ற துவக்க விழா" நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக "விலங்கியல் மன்ற துவக்க விழா" நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் அரசு கலை கல்லூரி தர்மபுரி இல் விலங்கியல் மன்ற துவக்க விழா நடைபெற்றது இந் நிகழ்வில் ஜீவநந்தினி மூன்றாம் ஆண்டு மாணவி விலங்கியல் துறை வரவேற்புரை நிகழ்த்தினார். 

மன்றத் துவக்க விழாவில் நடைபெற்ற ஓவிய போற்றி மற்றும் கதை எழுதுதல் கவிதை வாசித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சிறப்பு விருந்தினர், மருத்துவர் இரா செந்தில் வழங்கினார். முனைவர் விஜய தேவன் இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் விலங்கியல் துறை அரசு கலைக்கல்லூரி தர்மபுரி அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். இதற்கு முன்னதாக முனைவர் கண்ணன் முதல்வர் அரசு கலைக் கல்லூரி, தலைமை உரை நிகழ்த்தினார்.


மருத்துவர் செந்தில் தங்கம் மருத்துவமனை தர்மபுரி அவர்கள் சிறப்பு விருந்தினரால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சொற்பொழிவு வழங்கினார் ஜீவிதா  இரண்டாம் ஆண்டு மாணவி விலங்கியல் துறை நன்றியுரை நிகழ்த்தினார் இந்நிகழ்வை விலங்கியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad