இப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராமலும், வீட்டில் இருந்தபடியே இணைய வழி வாயிலாக வருகையை முறைகேடாக பதிவு செய்தும் அப்படியே பள்ளிக்கு வந்தாலும் அடிக்கடி வெளியே சென்று வந்தும், நீண்ட நேரமாக வகுப்பறைக்கு வெளியே நின்று செல்ஃபோனில் பேசிக்கொண்டும் காலம் கடத்துகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் முதல் இதுநாள் வரை காலை வணக்க கூட்டம் நடத்தியதுமில்லை, கொடி ஏற்றியதுமில்லை.
மேலும் மாணவர்களை ஒருமையில் பேசி வருகிறார். எனவே மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி மேலாண்மை குழு நடத்தும் கூட்டங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றும் போது அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ரிஜிஸ்டர் களையும் தர மறுத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களையும் உதாசீனமாக பேசி பள்ளி மாணவர்களின் மேம்பாடு குறித்த பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக