மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் பாலக்கோடு பகுதி வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு குறித்து விளக்க பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் பாலக்கோடு பகுதி வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு குறித்து விளக்க பயிற்சி.


தருமபுரி மாவட்டம். மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில், தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் களுக்கான பாலக்கோடு பகுதி வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு குறித்து விளக்க பயிற்சி பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட துணை செயலாளர் வக்கில்மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்ன், பேருராட்சி தலைவர்கள் பி.கே.முரளி, எம்.ஏ.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, பாலக்கோடு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்கள் தெரு வாரியாக, குடும்பம், வெளியூர், வெளிபாகத்தில் உள்ள விவரம், மாற்று திறனாளிகளின் விபரம், தொடர்பாக விபரங்கள் கணக்கெடுக்கும் பணி குறித்து விளக்கி கூறினார்.


இந்நிகழ்ச்சியில் வாக்குசாவடி முகவர்கள்,  ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பிணர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad