தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலாண்மை துறை சார்பாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 23 மாணவர்களுக்கு கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முனைவர் கார்த்திகேயன் துறை தலைவர் மேலாண்மை துறை அவர்கள் ஆணையினை வழங்கி பாராட்டினார், முனைவர் செல்வவிநாயகம் உதவி பேராசிரியர் மேலாண்மை துறை முனைவர் ஆர்டி சுரேஷ் மேலாண்மை துறை முனைவர் தஸ்நிம் மற்றும் முனைவர் முகமது நபி ஆகியோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக