இரயில் விபத்தில் உயிரிழந்த அசாம் மாநில நபரை தகனம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

இரயில் விபத்தில் உயிரிழந்த அசாம் மாநில நபரை தகனம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


அசாம் மாநிலம் சோனித்புர் மாவட்டம் ரங்கபாரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் காரிஜா (வயது 40) என்பவர் பிப்ரவரி 21ந் தேதி கவுகாத்தியிலிருந்து கோயமுத்தூருக்கு ரயிலில் வந்துள்ளார். பொம்மிடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இவரது குடும்பத்தினருக்கு சேலம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக அவரது மகள் கங்கா டில்லியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரை விமானத்தில் வரவழைத்து இன்று மை தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்தவரின் உடலை ரோட்டரி மின் தகன மேடையில் இறுதி அஞ்சலி செலுத்தி தகனம் செய்தனர். பின்னர் அவரின் அஸ்தியை பூஜை செய்து அவரது மகளிடம் ஒப்படைக்கப்படைத்தனர். 


இந்த நிகழ்வில் சேலம் இருப்பு பாதை முதல் நிலை காவலர் அருள் குமார், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அருள்மணி ஆகியோர் உடனிருந்தனர்,  மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 82 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad