தருமபுரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

தருமபுரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் சசிகுமார் போராட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரஞ்சித்,  ராஜீவ் காந்தி, நாகராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் சிவமலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


இந்த கண்டன ஆர்பாட்டத்தில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்தும், ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஒய்வூதியம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad