தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அடுத்த இராஜாதோப்பு பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் பூசாரியாக இருப்பவர் நாகன் (வயது .60), இவர் கடந்த நவம்பர் 27ம் தேதி இரவு கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்க்கு சென்றார், அடுத்த நாள் காலை கோயிலுக்கு வந்தவர் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த கால் பவுன் தங்க தாலி, 4 கிராம் வெள்ளி காசு, குத்து விளக்கு உள்ளிட்ட 3 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து பூசாரி நாகன் பாலக்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ஊமையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது.40) என்பது தெரிய வந்தது, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக