அரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

அரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்


அரூர் அருகே உள்ள சோரியம்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் தமிழரசன்(22) இவர் அரூர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன்  சாரதி(22) இருவரும் நண்பர்கள்   இருவரும் தனது சொந்த வேலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் ஈச்சம்பாடிக்கு சென்று விட்டு தனது ஊர் திரும்பும் வழியில் மாவேரிப்பட்டி  பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளனர்.


அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு தமிழரசன் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் படுகாயமடைந்த சாரதி என்பவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்  இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.


அக்கம் பக்கத்தினர் இவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தமிழரசன் தந்தை முனுசாமி   அரூர் போலிசில் புகாள் அளித்துள்ளார் அதில் எனது மகனின் விபத்து தானக நடந்தாக தெரியவில்லை அவ்வழியாக சென்ற ஏதேனும் வாகனங்கள் மோதியிருக்காலாம் எனவே விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் கூறியுள்ளார்.


இது குறித்து அரூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுததியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad