தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பையம்பட்டியானூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம் (வயது.62) இவரது மனைவி இராஜாமணி (வயது.58) இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ஆறுமுகம், இராஜாமணி இருவர் மட்டுமே தனியாக வசித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி, 20ம் தேதி காலை 10 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி தனது ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டியில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை, செல்போன் எண்ணிற்க்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்ததது. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி இராசாமணி கனவரை பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் கனவரை கண்டுபிடித்து தரக்கோரி காரிமங்மங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக