அதியமான்கோட்டை அருகே ஆதரவற்று இறந்த முதியவரை அடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

அதியமான்கோட்டை அருகே ஆதரவற்று இறந்த முதியவரை அடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லம்பள்ளி சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரைப் பற்றி விசாரித்ததில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது உறுதியானது. 

அதியமான் கோட்டை காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாது அவர்களின் கோரிக்கையின்படி மை தருமபுரி தன்னார்வலர்களின் அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சந்திரசேகரன் ஆகியோர் உயிரிழந்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 81 ஆதரவற்றவர்களை உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad