காரிமங்கலத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

காரிமங்கலத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.


தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி வரவேற்றார். மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, பொருளாளர் முருகன், துணை செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட்  கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்து செல்வது குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், வரும் மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா உள்ளிட்ட தீர்மாணங்கள் குறித்து விளக்கி பேசினார்.


இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால். அன்பழகன், முனியப்பன், பஞ்சப்பள்ளி அன்பழகன், வேடம்மாள், செளந்தர்ராஜன், செங்கண்ணன், சரவணன், சிவப்பிரகாசம், சக்திவேல், ரத்தினவேல், தலைமை செயற்குழு உறுப்பிணர் பி.சி.ஆர்.மனோகரன், நகர செயலாளர்கள் சீனிவான், முரளி, வெங்கடேசன், முல்லை ரவி, ஜெயசந்திரன், மோகன், கௌதமன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தமிழகன், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad