பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா பாண்டியன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற   உறுப்பினருமான தோழர் தா பாண்டியன்  அவர்களின்   மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் நகரக் குழு சார்பில்  பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர். தா. பாண்டியன் அவர்களின் திருவுருவ படத்திற்கு பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில சிறப்பு தலைவருமான தோழர். ந. நஞ்சப்பன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கோபால் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் எஸ் கலைசெல்வம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ் தேவராஜன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சி மாதையன், ஒன்றிய பொருளாளர் முத்து, ஒன்றிய துணை செயலாளர் மாதப்பன், நகர துணை செயலாளர் தர்மராஜா  மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜே ஆர் முனிராஜ், லட்சுமி காந்தன், எல்.நாகராஜ், சண்முகம் ,முருகன் மற்றும் வெள்ளத்துரை, பழங்குடி மக்கள் சங்கம் சின்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை  செலுத்தினர்.

இதேபோல் பென்னாகரம் நகரம் மிட்டாதார் தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில்  தோழர் தா பாண்டியன்  அவர்களின்   மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad