காவலர் மாணவர் படை மாணவர்களிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலந்துரையாடல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

காவலர் மாணவர் படை மாணவர்களிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலந்துரையாடல்.


தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பென்னாகரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் காவலர் மாணவர் படை மாணவர்களிடையே தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.


இதில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் மாணவர்கள் நம் நாட்டின் தூண்கள் போன்றவர்கள், எந்த ஒரு தீங்கு செயல்களுக்கும் செல்லாமல் செல்போன் வரும் குறுஞ்செய்திகளை நம்பி அதில் ஈடுபடக் கூடாது, என்றும் படிப்பில் நன்கு கவனம் செலுத்தி மாணவர்கள் நல்ல உயர் பதவிக்கு வர வேண்டும் என்றும், மேலும் தங்கள் ஊர்களில் சமூக தீங்கு செயல்கள் போன்றவற்றை நடைபெற்றால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து மாணவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்த நிகழ்வில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி P. மகாலட்சுமி, பென்னாகரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு தமிழ்ச்செல்வன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் . 

கருத்துகள் இல்லை:

Post Top Ad