மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் 10 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மார்ச், 2024

மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் 10 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் .


தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இரயில்வே கேட் அருகே வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாரியப்பன் தலைமையிலான பறக்கும் படையினர் குழு மார்ச்.28, வியாழக்கிழமை, இன்று மாலை 6 மணிக்கு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.


அப்போது மாராண்டஅள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் ஓசூர் பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவரின் மனைவி இலட்சுமி, தேர்தல் நடத்தை விதிகள் மீறி உரிய ஆவணம் இன்றி10 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது.


அவரிடமிருந்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பாலக்கோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார்  ஆறுமுகம், துணை தாசில்தார் எழில்மொழி ஆகியோர் முன்னிலையில்  பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் இலட்சுமியிடம் பணத்திற்க்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று கொள்ள அறிவுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad