இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும் நமது குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 மார்ச், 2024

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும் நமது குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.


தருமபுரியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை! ஆதரித்து நடந்த பிரச்சார பொதுக்கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. மணி மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், இந்தியாவில் சமூக நீதி காக்க பட வேண்டும் என்றால், எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் என்றால் பாசிச பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சமுக நீதிக்கு குழி தோண்டி பு க்க கூடிய கட்சி தான் பாஜக, சாதி மத உணர்வ தூண்டிவிட்டு அதில் குளர்காயும் கட்சி தான் பாஜக.


சமூக நீதி பேசி வரும் பாமக ராமாதாஸ் எங்கே கூட்டணி வைத்திருக்கிறார், ஏன் அங்கே கூட்டணி வைத்திருக்கிறார் என்று பாமகவினருக்கே  நன்றாகவே தெரியும் இந்தியா கூட்டணி என்பது மக்களுக்காக பாடுபடும் கட்சி, கலைஞர் அவர்களை பற்றி பேசிய முதலமைச்சர் சாமானிய மக்களுக்காக ஆட்சி அமைத்தவர் கலைஞர் அவர்கள் பிற்படுத்தபட்டோர் சமுதாய நலனுக்காக, பல்வேறு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்தவர் கலைஞர் வன்னியர் சமூகம் உள்ளிிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீட்டில் போராட்டில் உயிர் நீத்த அந்த குடும்பங்களுக்கும் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வழங்கபடுவது கலைஞர் ஆட்சியில் தான்.


ஓட்டு மட்டும் போடும் சமுதாயமாக வன்னியர் இருந்திருக்கும் அதை மாற்றியவர் கலைஞர் என்று பாரட்டியவர் ராமாதாஸ் அவர்கள்,  அதை மாற்றிட முடியுமா,  சமூக நீீதி பேசும் ராமதாஸ் அவர்கள் சமூக நீதிக்கு எதிரான கட்சியான பா ஜ க வுடன் கூட்டு சேரந்திருப்பது எதானால், பா ம க வினரே புலம்பி வருகின்றனர்.


2021 ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த ராமதாஸ்.. தற்போது மோடியிடமோ, அமித்சாவிடமோ, இதை பற்றி கோரிக்கை வைத்திருக்கிறாரா ராமதாஸ் பாஜகவின் தேர்தல் அறிக்கையில்  ஜாதி வாரி கணக்கெடுப்பு குறி்த்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதா,  மாநில அரசு சர்வே தான் எடுக்க முடியும், ஒன்றிய அரசால் மட்டுமே கணக்கெடுக்க முடியும் என்பது ராமாதாசுக்கு தெரியாதா.. தெரிந்தே தான் ராமாதாஸ் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார், ராமதாசை பற்றி நான் வேறு எதுவும் சொல்வதிற்கில்லை.


மகளிர் உரிமைத்தொகையால் பெண்கள் அடைந்து வரும் பயன்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கபடுவதால் பயன்கள் அதே மாணாக்கர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு உதவி தொகை வழங்கப்படு்ம்..


பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்,தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.. ஒசூரில் புதிய விமான நிலையம், கிருஷணகிரியில் பதிய ரயில் நிலையம் அமைக்கப்படும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரவாக்கம் செய்யப்படும், தருமபுரி மொரப்பூர் ரயில் பாதை விரிவக்கம் பணி செய்யப்படும், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், ஒசூர் நகரின் வளர்ச்சிக்காங மெட்ரோ ரயில்வே திட்டங்கள், இதே போல சாலை விரிவாக்கங்கள் செய்யப்படும் என பேசிய முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் ஒசூரில்  உதிரி பாங்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு ஜி எஸ் டி விதிப்பால்  தொழீலே முடங்கியிருக்கிறது..


மோடி ஆட்சியில ரபேல் ஊழல், தேர்தல் பத்திரம் பண வசூல் விவாகரம் என மோடி அரசின் ஊழல்கள் நீளுகிறது, இதற்கெல்லாம் மோடி பதில் சொல்லி தான் ஆக வேண்டும், ஏழை மக்களை வஞ்சிக்கிர ஒரு ஆட்சியாக தான் பாஜக வின் ஆட்சி இருந்தது.. ரத்தம் சிந்தி உழைக்கிற மக்களுக்கு ஆதரவாக இல்லாம், கார்பரேட் கம்பெனிகளுக்கு  ஆதரவாக செயல்பட்டவர்..மோடி


தேர்தலில் போட்டியிட  பணமில்லயாம் நிர்மலா சீதாராமனிடம், நம்ப முடிகிறதா தேர்தலில் நின்றால் மக்கள் சரியான புகட்டுவார்கள் என்று தெரிந்து தான் போட்டியிடவில்லை..


பச்சைதுண்டு போட்ட பழனிச்சாமி பாஜக கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் ஆதரவு தெரிவித்தவர் தான் பாதம் தாங்கி பழனிச்சாமி, கள்ளக்கூட்டணி வைத்திருந்த பழனி்ச்சாமி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிறாரரம் நம்ப முடிகிறதா.


இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும் நமது குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும், பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று பேசிய முதலமைச்சர் நாற்பதும் நமதே, நாடும் நமதே என்றார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad