தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாபுசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஒகேனக்கல் குடிநீர் கடைகோடி கிராமங்களுக்கும் முழுமையாக சென்றடைவது பெரும் சிரமமாக உள்ளதாகவும், இடைப்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாகவும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி குழாய் அமைத்தும், கேட் வால்வு பகுதிகளில் குடிநீர் பிடித்து வருவதால் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக குடிநீர் சென்றடைவதில்லை, எனவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குடிநீர் கேட் வால்வு அகற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் திடிர் சாலை மறியலால் நகர பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக