உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் வர்த்தக அணி சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு 100 பேருக்கு உணவளித்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் வர்த்தக அணி சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு 100 பேருக்கு உணவளித்தனர்.


தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள் கைவிடப்பட்டோர் இல்லங்களில் உணவு வழங்குமாறு கட்டளையிட்டு இருந்தார். 


அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மாவட்ட வர்த்தக அணி சார்பில், 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு பிரியாணி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் தாபா சிவா அவர்களின் வழிகாட்டுதல்படி மாவட்ட வர்த்தக அணி சார்பில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இதில், வர்த்தக அணி மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் முருகன் ஏற்பாட்டில் உணவு வழங்கினர். துணைச் செயலாளர் கார்த்திக் இணை செயலாளர் முத்து ஒன்றிய தலைவர் பொன்னுசாமி ஒன்றிய செயலாளர் கலைமணி பொருளாளர் விஜய் ஆனந்தன் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு பிரியாணி உணவை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad