இவ்விழாவில் தர்மபுரி ஊரக வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி அவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பேசிய அவர் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டு பாலக்கோட்டில் புதியதாக அரசு கண்சிகிச்சை மருத்துவமனை திறக்கப்பட்டது.
மேலும் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் கண் புரை மற்றும் கண் சதை வளர்ச்சி அறுவை சிகிச்சை என 300 கண் நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தீர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு கண் சிகிச்சைமருத்துவமனையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கண் சிகிச்சை மருத்துவர் ஷாலினி, செவிலியர்கள் கோகிலா, மதீனா, லட்சுமி காயத்திரி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செந்தில்குமார், ஜெகதீசன், சசிரேகா மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும் கண் நோயாளிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக