பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 2024-25ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 2024-25ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு https/www.tnpoly.in என்ற இணைய தள முகவரியில் இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்திட 27.5.2024 வரை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தால் நீட்டிப்பு அளிக்ககப்பட்டுள்ளது. 

எனவே +2 தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட ITI படிப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் 24.05.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் முனைவர்.பெ.செல்வராணி, M.E.,Ph.D., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad