திமுகவின் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் மே-27ல் நடைபெறும் - மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மே, 2024

திமுகவின் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் மே-27ல் நடைபெறும் - மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தகவல்.


தி.மு.கவின் தருமபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 27.05.2024 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் காரிமங்கலத்தில் அமைந்துள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும், கூட்டத்திற்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட அவைத்தலைவர் திரு.கே.மனோகரன் தலைமை தாங்கி நடத்தவுள்ளார்.

அது சமயம் செயற்குழு கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad