ஆனால் ஜோதிபிரியா குடும்பத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் ஜோதிபிரியாவிற்க்கு திருமணம் நிச்சயம் செய்தனர். இத்திருமணம் இன்னும் 2 வாரங்களில் நடைபெற இருந்த நிலையில் இரண்டு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை சுறுசுறுப்பாக செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி நேற்று முன்தினம் காலை மருதாணி வாங்க கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஜோதிபிரியா மீண்டும் வீடு திரும்பவில்லை, நீண்ட நேரமாகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் தந்தை செல்வகுமார் தோழிகள் வீடு, உறவிணர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், மகளை கண்டுபிடித்து தர கோரிகாரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஜோதிபிரியா தனது காதல் கணவர் செல்வகுமாருடன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தவர், பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்கவில்லை என்றும் காதலன் செல்வகுமாரை நேற்று மருதமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் நான் செல்வகுமாருடன் தான் வாழ்வேன் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜோதி பிரியாவை காதல் கணவர் செல்வகுமாருடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்திலையில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக