பொரத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில், முதியவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மே, 2024

பொரத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதியதில், முதியவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.


தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த காணாப்பட்டியை சேர்ந்த முதியவர் மணி (வயது.70) இவர் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டியில் உள்ள தனது உறவினரின் 11வது நாள் காரியத்திற்க்கு செல்வதற்காக  காணாப்பட்டியை சேர்ந்த தனது உறவினர்களான முனுசாமி (வயது. 65) பச்சை (வயது.79) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் உட்கார வைத்து கொண்டு நேற்று மதியம், புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். 


வழி தெரியாமல் பாலக்கோட்டை தாண்டி பொரத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது ஓசூரிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்த சொகுசு கார் முதியவர் மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் மணி, முனுசாமி, பச்சை ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மூவரும் உயரிழந்தனர்.


தகவலறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுந்தரம் சம்பவ இடத்திற்க்கு சென்று மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி சவகிடங்கிற்க்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad