பாலக்கோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு BDO அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 மே, 2024

பாலக்கோட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு BDO அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, உலக பட்டினிதினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


உலகம் முழுவதும் மே 28ம் தேதி பட்டினி தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், கட்சி ஆலோசனைப்படி, பொதுமக்களுக்கு உணவு வழங்க  உத்தரவிட்டதின் பேரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஒன்றிய, நகர,கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் என திராளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad