தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளியில் அக்குமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த புதன்கிழமை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 5 நாட்களாக பக்தர்களின் 7 பைக்குகள் திருடு போய் உள்ளன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று காலை பி.கொல்ல அள்ளியை சேர்ந்த முரளி (வயது.30) என்பவர் தனது ஸ்பிளண்டர் ப்ளஸ் வாகனத்தில் கோயிலுக்கு வந்தவர், வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றார்.
அப்போது இவரது பைக்கை 2 வாலிபர்கள் திருடிக் கொண்டு ஓட்டி சென்றனர். இதையறிந்த முரளி சத்தம் போட்டு கொண்டு அவர்களை துரத்தினார், இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அவருடன் சேர்ந்து விரட்டி சென்று திருடனை பிடித்து பைக்கை மீட்டனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த எஸ்.ஐ.முனிராஜ் மற்றும் போலீசிடம் திருடனை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் வாலிபர் கடமடையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது. 26).என்பதும் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக