கர்த்தாரப்பட்டி மேம்பாலம் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பணை செய்த கடைக்காரர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

கர்த்தாரப்பட்டி மேம்பாலம் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பணை செய்த கடைக்காரர் கைது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது.48) இவர் பாலக்கோடு அடுத்த கர்த்தரப்பட்டி மேம்பாலம் அருகே பட்டாசு மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் உரிமம் இன்றி பட்டாசுக்களை  விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.


பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று  மாலை ராஜா பட்டாசு கடையில் ஆய்வு செய்த போது உரிமம் புதுப்பிக்காமல் பட்டாசு விற்பனை செய்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுக்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad