கொலசனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசுவேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

கொலசனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசுவேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி.


தெலங்கானா மாவட்டம், பொங்களூர் கிராமத்தை சேர்ந்த சியாம்பிரசாத்ரெட்டி, அதே பகுதியில்  டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீத்தா ரெட்டி (வயது. 25) இவர்கள்   கேரளா மாநிலத்திற்க்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று காலை சொகுசு வேனில் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.


 மகேந்திரமங்கலம் அருகே கொலசனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் நெல் மூட்டை ஏற்றி சென்ற சரக்கு லாரி மீது சொகுசு வேன் மோதியது, இந்த விபத்தில் ஸ்ரீத்தா ரெட்டி படுகாயமடைந்தார், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீத்தா ரெட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad