புற்றுநோய் பாதித்த இளைஞருக்கு‌ தட்டணுக்கள் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 மே, 2024

புற்றுநோய் பாதித்த இளைஞருக்கு‌ தட்டணுக்கள் தானம் வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்.


வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பழனியை சேர்ந்த இளைஞர் புற்றுநோய் பாதித்து சிகிச்சையில் உள்ளார். அவரது சிகிச்சைக்கு தட்டணுக்கள் தேவைப்பட்டதை அறிந்து தருமபுரியிலிருந்து மை தருமபுரி அமைப்பினர் வேலூர் சென்று தட்டணுக்கள் தானம் வழங்கினர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் 88 முறையாக தட்டணுக்கள் தானமும், சமூக சேவகர் அருணாசலம் அவர்கள் 23 ஆவது முறையாகவும், சமூக சேவகர் விஜயகாந்த் அவர்கள் 15 ஆவது முறையாகவும் தட்டணுக்கள் தானம் வழங்கினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad