அரூர் அருகே உள்ள சங்கிலிவாடியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 62வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெறும் கிரிக்கெட் போட்டி சங்கை பி.ஆர்.திடலில் நடைபெற்றது, இப்போட்டி கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் தொடங்கி நடைபெற்றது இப்போட்டிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தொடங்கி வைத்தார் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி முன்னிலை வகித்தார்.
இப்போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி நாளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா பரிசுகள் வழங்கி வாழ்த்தினார் முதல் பரிசு மெணசி இரண்டாம் பரிசு சங்கிலிவாடி மூன்றாம் பரிசு மொண்டுகுழி ஆகிய அணிகளுக்கு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொருலாளர் தாதைவேடியப்பன் அரூர்ராம் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக