தருமபுரி மாவட்டத்தில் மை தருமபுரி அமைப்பினர் பல்வேறு சமூக சேவைகளை ஏழ்மையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். ஆதரவற்று இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் அமரர் சேவை பணியை தங்கள் உறவாக நினைத்து நல்லடக்கம் செய்து வருகின்றனர். இறந்த புனித உடலை தங்கள் சொந்த ஊர் கொண்டு செல்லும் மனிதாபிமானமிக்க செயலை இயக்குனர் மந்திரமூர்த்தி அவர்கள் அயோத்தி திரைப்படத்தில் காண்பித்திருப்பார்.
இன்று மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து இதுவரை 90 ஆதரவற்ற புனித உடல்களை நல்லடக்கம் செய்த அனுபவத்தை பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக