தற்போது குடிநீர் குழாய், தார்சாலை அமைக்கும் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும், தார்சாலையை சீரமைக்காததால், அவ்வழியாக அமானிமல்லாபுரம், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெல்ரம்பட்டி, கரகூர், சீரியனஹள்ளி, கோட்டூர், பெலமாரனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்ளும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் பாலக்கோடு பேரூராட்சி நகர பகுதியில் இருந்து புதிய தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலையாக இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருவதாலும், சாலை மிகவும் குறுகலாகவும் இடநெருக்கடியாகவும் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இச்சாலையை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக