மது பிரியர்களுக்கு அரசின் முக்கிய அப்டேட். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 மே, 2024

மது பிரியர்களுக்கு அரசின் முக்கிய அப்டேட்.


தருமபுரி மாவட்டத்தில் பாராளுமன்ற பொது தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.06.2024 (Counting of Votes) அன்று நடைபெறுவதால் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள்,  FL-3, FL-3A/ FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் இராணுவ வீரர் கேண்டீன் ஆகிய அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி செயல்படாமல் மூடி வைக்கவும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. 


மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad